பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை தற்போது ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதனால் படத்தில் இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்- நடிகைகள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கிறார் சிரஞ்சீவி. மேலும், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று படத்தின் தலைப்புடன் கூடிய லோகோ வெளியாக இருப்பதாக படத்தின் டைரக்டர் சுரேந்தர் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.