டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டதற்குப் பிறகு தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழுக்குக் கிடைத்த வரவேற்பில் பாதியளவு கூட கிடைக்கவில்லை. அதற்கக் காரணம் அங்கு பங்கேற்றுள்ள போட்டியாளர்கள். சுவாரசியமான பேச்சுக்கள், சண்டைகள் அவர்களுக்குள் நிகழாமல் மிகவும் சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதனால், தெலுங்கு ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மேல் ஒரு ஈர்ப்பு வரவில்லை என்பது உண்மை.
ஜுனியர் என்டிஆர் மட்டும் நன்றாக தொகுத்து வழங்கினால் போதாது, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களும் திறமைசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என தெலுங்கு ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். அதனால், நிகழ்ச்சியில் ஏதாவது சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள். நேற்று திடீரென நடிகர் சம்பூர்ணேஷ் பாபு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டு பயங்கரமாக கத்த ஆரம்பித்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என ஆவேசமாகப் பேசினார். அவரைப் பலரும் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சரியாகவில்லை.
கடைசியில் பிக் பாஸ் அவரை அழைத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற சம்மதித்தார். அதைத் தொடர்ந்து சம்பூர்ணேஷ் பாபு 'பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு வெளியேறியது, மற்ற போட்டியாளர்களுடன் விடைபெற்றுச் செல்வது போன்ற காட்சிகள் நிகழ்ச்சியில் காட்டப்படவேயில்லை.