டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 2௦13ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி, பாவனா நடித்திருந்த இந்த படத்தை சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி இதன் இரண்டாம் பாகத்தையும் 'ஹனி பீ-2' என்கிற பெயரில் எடுக்க வைத்து, அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது. இந்த நிலையில் இயக்குனர் ஜூனியர் லாலை ஒரு இளம் டிவி நடிகை பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது.. இதுகுறித்து, நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் லால்
“இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு சற்று புதிய நபர்கள் தேவை என்பதால் கதாநாயகிக்கு துணையாக வரும் சில இளம் நடிகைகளை போட்டோக்கள் மூலம் செலக்ட் செய்தோம். இப்போது குற்றச்சாட்டு கூறிய இந்த பெண்ணும் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வரவழைத்து தான் நானும் என் மகனும் அவரிடம் பேசினோம். படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் இதில் நடித்த சீனிவாசனுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போனதால், இந்தப்பெண் சம்பந்தப்பட்ட காட்சியை மறுநாள் மாற்றினோம். ஆனால் மறுநாள் லைட்டிங் பிரச்சனையால் சற்றே தாமதமாக இந்தப்பெண் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்..
எனது மகனும் (இயக்குனர் ஜூனியர் லால்) பதிலுக்கு கோபத்தில் கத்திவிட்டு, உன் நடிப்பு சரியில்லை நீ கிளம்பு என கூறிவிட்டார். அது கூட உதவி இயக்குனர்களின் கருத்தை தான் அவர் சொன்னார். ஏற்கனவே 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியிருந்த நிலையில் அந்தபெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயாக கொடுத்தோம். அதன்பின் சில நாட்கள் கழித்து பத்து லட்சம் ரூபாய் நஷ்ட வேண்டும், டிவியில் மன்னிப்பும் கேட்க வேண்டும் என அந்தப்பெண் நோட்டீஸ் அனுப்பினார்..
நாங்கள் அதை கண்டுகொள்ளவில்லை... படமும் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீசாகிவிட்டது.. எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அப்போதே அந்தப் பெண் தனது தரப்பு நியாயத்தில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். அப்போது அமைதியாகவிட்டு இப்போது மீண்டும் இந்தப்பிரச்சனையை கிளறுவது ஆதாயம் தேடும் நோக்கில் தான். எனது சினிமா அனுபவத்தில் இவர்கள் போன்ற சில பெண்கள் கொடுக்கும் சிக்கல்களை சமாளித்து கடந்து தான் வந்துள்ளோம், இது ஒன்றும் புதிதல்ல” என விளக்கமாக கூறியுள்ளார் நடிகர் லால்.