வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சுரேஷ்கோபி, சரத்குமார், சூர்யா போன்றவர்கள் கோடீஸ்வரன் போன்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக தொலைக்காட்சி வாசலில் வந்திறங்கினார்கள்.. இப்போது கமல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக சின்னத்திரையில் முதன்முதலாக களம் இறங்கியுள்ளார்.. இவையெல்லாம் அறிவார்ந்த நிகழ்ச்சிகள் என்பதைவிட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்கிற வரையறைக்குள் தான் அடங்கும்.. இவர்களைப்போல மோகன்லாலும் இப்போது சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.. ஆனால் அது பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சி அல்ல..
ஆம்.. இதுகுறித்த அறிவிப்பை மோகன்லாலே வெளியிட்டுள்ளார்.
“எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அன்புகாட்டும் தாய்ப்பாசத்துக்கு ஈடானது எதுவும் இல்லை.. அவர்களில் பலரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வெளியே யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.. அப்படி உங்கள் பகுதியில் உங்களை பாதித்த, கவர்ந்த போராட்ட குணத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்ட தாய்மார்கள் பற்றி எவருக்கேனும் தெரிந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.. அவர்கள் எந்த பேக்ரவுண்டை சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி.. அவர்களை நானே நேரில் சந்தித்து உரையாடுவதில் பெருமைப்படுகிறேன்.. அவர்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது இன்றைய இளையதலைமுறைக்கு தெரியவேண்டிய பாடமாக இருக்கும்” என கூறி, அதற்கான தொலைபேசி எண்ணையும் அளித்துள்ளார் மோகன்லால்.
இந்த நிகழ்ச்சி ஒரு பிரபல தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகவுள்ளது.