பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
AMMA என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்திற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் தலைவரான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் இன்னொசன்ட், பொதுச்செயலாளரான மம்முட்டி, துணைத்தலைவர் மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளரான திலீப் மட்டும் போலீசாரின் விசாரணைக்கு செல்ல வேண்டி இருந்ததால் இந்தகூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தவிர இந்த கூட்டத்தில் திலீப்-பாவனா விவாகரம் விவாதிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் நேற்று அவர்கள் விவகாரத்தை பற்றி சங்கத்தில் உள்ள' முக்கிய உறுப்பினர்கள் உட்பட யாரும் வாய்திறக்கவில்லை. இதுபற்றி கூறிய நடிகர் சங்க தலைவர் இன்னொசன்ட், “இந்த விவகாரம் தற்போது போலீஸ் வசம் இருக்கிறது. இன்று விசாரணையும் நடக்க இருக்கிறது. அதனால் இந்த சமயத்தில் இதுபற்றி நாம் விவாதிக்க தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார். இந்த முடிவின் பின்னணியில் மம்முட்டியும் மோகன்லாலும் இருப்பதாக ஒரு தகவலும் கசிந்துள்ளது.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திலீப் கலந்து கொண்டார். ஆனால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாவனா கலந்து கொள்ளவில்லை. அதேபோல திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார்.