ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
பிருத்விராஜ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'தியான்' படம் நாளை வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் வரும் ஜூலை-7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவுற்று சென்சாருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டதாம்.. இதில் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக கூறி அதை நீக்கும்படி சொன்னார்களாம் சென்சார் அதிகாரிகள்..
ஆனால் படத்தின் இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமாரும் கதாசிரியர் முரளிகோபியும் அதற்கு தகுந்த விளக்கங்களை சென்சாரிடம் கூறினார்களாம். இந்த இழுபறியால் 'தியான்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. வடமாநில பின்பலத்தில் இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் அவரது சகோதரர் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்.. “ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது.