நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தான் தேசியவிருதுபெற்ற நடிகர் சலீம்குமார். ஒருகாலத்தில் மோகன்லால், மம்முட்டி இருவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்த இவர் கடந்த சில வருடங்களாக மோகன்லாலுடன் சற்றே மனத்தாங்கல் கொண்டிருந்தார்.
குறிப்பாக கடந்தவருடம் நடந்த கேரள சட்டமன்ற தேர்தலில், தேர்தலில் போட்டியிட்ட ஒரு நடிகருக்காக, மோகன்லால் மேடை பிரச்சாரம் செய்தது தவறு என கூறி நடிகர் சங்கத்தில் இருந்து விலகும் அளவுக்கெல்லாம் போனார் சலீம்குமார்.
இந்த மனத்தாங்கல் காரணமாகவே கடந்த 2011ல் வெளியான 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' படத்திற்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்காமல் இருந்தார் சலீம்குமார்.. ஆனால் சலீம்குமாரை சமாதானப்படுத்தியதோடு, மோகன்லால் உங்கள் மீது எப்போதும் போல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என கூறி அவரது மனக்கசப்பை மாற்றியிருக்கிறார் பிரபல இயக்குனர் லால் ஜோஸ்.
அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலை வைத்து தான் இயக்கிவரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்திலும் சலீம்குமாரை மிக முக்கியவேடம் ஒன்றில் நடிக்கவைத்துள்ளார். சுமார் ஆறு வருட பிரிவிற்கு பின் மோகன்லாலும் சலீம்குமாரும் இணைந்து நடிப்பதை பார்த்த படக்குழுவினர் மிகவும் சந்தோஷமடைந்துள்ளனர்.