ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வெள்ளியன்று கௌதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' படம் வெளியானது.. இந்தப்படத்தில் குணசீலன் என்கிற சியா கேரக்டரில் சௌகார்பேட்டை சேட்டாக அற்புதமாக நடித்திருந்தார் மலையாள நடிகர் சித்திக். அதில் அப்பாவி முகத்தோற்றத்துடன் வந்து வில்லத்தனம் காட்டியவர், தற்போது அடப்பாவி என மலைக்க வைக்கும் விதமாக மொட்டத்தலையும் கட்டை மீசையுமாக புதிய ஆளாக வில்லத்தனம் காட்ட இருக்கிறார்..
இந்த கெட்டப் லால் ஜோஸ் டைரக்சனில் மோகன்லால் நடித்துவரும் வெளிப்பாடிண்டே புத்தகம் என்கிற படத்திற்காகத்தான். இதில் தரகன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் சித்திக். மோகன்லால் கல்லூரியின் துணை முதல்வராக நடிக்கிறார். கல்லூரியில் மாணவர்களை மோகன்லாலுக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் பண்ணும் ஆளாக நடிக்கிறார் சித்திக். பல வருடங்களாக திரையுலகில் சமகாலத்தில் பயணித்தாலும் இப்போதுதான் மோகன்லால்-லால் ஜோஸ் முதன்முறையாக இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.