இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், விவசாயிகள் காக்க தற்போது ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். உணவுக்கு ஆதாரமாக இருக்கும் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதே எனது தொண்டு நிறுவனத்தின் முதல் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் மஞ்சு மனோஜ்.
மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது முதல் தேவையான வறுமையை ஒழிக்கும் முயற்சியாக, நிதி திரட்டத் தொடங்கியிருக்கும் அவர், வறுமையில் தவிக்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பணஉதவிகளை செய்யப்போகிறாராம். அதோடு, தனது இந்த தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் கைகோர்க்க சமூக ஆர்வமுள்ள மேலும் பலரையும் இணைத்து வருகிறார் மஞ்சுமனோஜ்.