ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றது. அதில் லேட்டஸ்ட்டாக எதிர்ப்புக்கு ஆளாகி இருபது, இன்னும் ஆரம்பிக்கவே படாத, தற்போது 'மகாபாரதம்' என டைட்டில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள மோகன்லாலின் ஆயிரம் கோடி பட்ஜெட்தான 'மகாபாரதம்' படம் தான். 'கேரள ஹிந்து ஐக்கிய வேதி' என்கிற அமைப்பின் தலைவரான கே.பி.சசிகலா என்பவர் தான் இதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பவர்.
எதற்காக மோகன்லால் படத்தை எதிர்க்கிறார் என்றால்,, மகாபாரதம் என்கிற டைட்டிலை இந்தப்படத்துக்கு வைக்க கூடாதாம்.. காரணம் இந்தப்படத்திற்கான கதையாக எழுதப்பட்ட 'ரண்டமூழம்' நாவலே, மகாபாரதத்தில் இல்லாத சில நிகழ்வுகளை இட்டுக்கட்டி, பீமனின் கேரக்டரை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது.. அப்புறம் எப்படி இதற்கு மகாபாரதம் என டைட்டில் வைத்தார்கள்.. அதை உடனே மாற்றவேண்டும்.. அப்படி இந்தப்படம் தயாராகி, 'மகாபாரதம்' டைட்டிலுடன் வெளியானால் அந்தப்படத்தை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம் என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார் இந்த சசிகலா.