600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு கைதி நம்பர் 150 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், தற்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாறு கதையை ஓகே செய்தார். நடிகர் ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். செட் வேலைகளை ராஜீவன் தொடங்கி விட்டார்.
இந்த படம் குறித்து சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில், சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதோடு இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் தான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரப்போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டியைப் பற்றி இந்தியா முழுக்க உள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.