இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள நடிகர்களில் பலரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் சொந்த வேலைகளை பார்க்கும்போது, இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான் மட்டும் சமூக நிகழ்வுகளுக்கு அதில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.. அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு (SOS Children Village Kerala) சென்று அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்..
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.. இங்குள்ள குழந்தைகளுக்கு துல்கர் சல்மானை ரொம்பவே பிடிக்கும் என்பதால், நிர்வாகத்தினர் அதை துல்கர் சல்மானிடம் கோரிக்கையாக வைத்தனர்.. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட துல்கர் சல்மான் அங்கே வந்து குழந்தைகளை மகிழ்வித்து சென்றுள்ளார்.