தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு தாமதாக வழங்கப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்ட கே.விஸ்வநாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார் சிரஞ்சீவி. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கே.விஸ்வநாத் மகத்தான படைப்பாளி, அவர் தெலுங்கு சினிமாவின் சொத்து. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை தேட விரும்பவில்லை. இந்த தருணத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் தாதா சாஹேப் பால்கே விருது முழுமை அடைந்திருக்கிறது. அவருக்கு கிடைத்த விருதால் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது. அவரது குடும்ப நணபர் என்ற முறையில் எங்கள் குடும்பமும் பெருமை கொள்கிறது. என்றார்.