ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக எழுதிய ரண்டமூழம் நாவல் 'மகாபாரதம்' என்கிற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முழுக்க பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதாம். இதில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.. விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்த படம் பற்றி ஸ்ரீகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இந்த கதையில் பீமன் பற்றிய கதாபாத்திரத்தை நான் மனதில் உள்வாங்கும்போது அது மோகன்லால் உருவமாகத்தான் என் மனதில் பதிந்தது. ஒருவேளை அப்படி வேறு ஒருத்தர் தான் பீமனாக நடிக்கவேண்டும் என்கிற சூழல் உருவாகி இருந்தாலோ, அல்லது மோகன்லால் நான் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தாலோ, இந்த ஸ்கிரிப்ட்டை அப்படியே எம்.டி.வாசுதேவன் நாயரிடம் திருபிக்கொடுத்திருப்பேன். காரணம் மோகன்லாலை தவிர வேறு யாரையும் பீமனாக நினைத்து பார்க்க என்னால் முடியவில்லை” என கூறியுள்ளார் ஸ்ரீகுமார் மேனன்.
மேலே படத்தில் பீம்ணனின் உருவத்தில் உள்ள மோகன்லாலின் தோற்றம் மோகன்லால் ரசிகர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டதாகும்.