ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி, சினேகா, ஆர்யா, மியா ஜார்ஜ் நடித்துள்ள மலையாளப் படம் கிரேட் பாதர். ஹனீப் அதானி இயக்கி உள்ளார், கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார், ஆகஸ்ட் சினிமா சார்பில் பிருத்விராஜ், சந்தோஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவர வேண்டிய படம், அப்போது தியேட்டர் அதிபர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் வெளிவரவில்லை. தற்போது கேரள பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் நாளை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கல்ச்சர் அண்ட் ஆர்ட் என்ற பேஸ்புக் தளத்தில் படத்தின் கடைசி 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சி வெளியாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையில் ஓடும் காட்சியை செல்போனில் எடுத்து பதிவேற்றி உள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவாரான ஷாஜி நடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.