டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு அவருக்கு பக்கபலமா இருந்து செயல்பட்டவர் பிருத்விராஜ். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பாவனாவை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க அழைத்து வந்திருப்பது பிருத்விராஜ்தான். இந்த நிலையில் இனி பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
பாவனாவிடமிருந்த மனோதிடமே அவரை இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது. இனி நான் பெண்களை வக்கிரமாக சித்தரிக்கும் கேரக்டர்களிலோ, படங்களிலோ நடிக்க மாட்டேன். இதற்கு முன்பு அப்படி நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார். பிருத்விராஜின் இந்த அறிவிப்பு மலையாள நடிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனி அவர்களும் அடுத்தடுத்து இதுபோன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.