ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் சம்பந்தபட்டிருப்பதாக சிலர் கொளுத்திப்போட, இன்னொரு பக்கம் இயக்குனர் சித்தார்த் பரதனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. தமிழில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் பரதனின் மகன் தான் இந்த சித்தார்த் பரதன்.. மலையாள குணச்சித்திர நடிகையான கே.பி.ஏ.சி லலிதா தான் இவரது அம்மா..
“குற்றவாளி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டதற்காக கேரள போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. அதேசமயம் இந்த விவகாரத்தில் எதற்காக என் மகனின் பெயரை சிலர் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி என் மகன் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் அவன் மீது நடவடிக்கை எடுங்கள்... தண்டியுங்கள்” என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை கே.பி.ஏ.சி லலிதா.. இந்த சித்தார்த் பர்பாதன் நடிகர் திலீப் படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் கடந்த வருடம் மிகப்பெரிய விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.