இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதற்கான ஸ்டெப்பை மோகன்லாலே எடுத்துள்ளார். காரணம் ஜோஷி போன்ற இயக்குனர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதுதான் மோகன்லாலின் எண்ணம்.
கடந்த சில வருடங்களாக எதுவும் பெரிய ஹிட் கொடுக்காததால், அடுத்து தாங்கள் இருவரும் இணையும் படம் இழந்த பார்மை மீட்டுத்தரவேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜோஷி ஸ்கிரிப்ட்டை தயார்செய்து வருகிறாராம். அதற்காகவே தனது வழக்கமான கதாசிரியர்களை விட்டுவிட்டு, 'புலி முருகன்' சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் ஜோஷி. மோகன்லால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் விரைவில் இந்தப்படம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.