விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது தந்தையும் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக மாறினார். இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கும் 151வது படத்தையும் ராம் சரணே தயாரிக்கவுள்ளார் என ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ராம் சரணின் அடுத்த தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் பாபி இயக்கத்தில் கல்யாண் ராம் என்.டி.ஆர் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கவிருக்கும் ஜெய்லவகுச படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். ஜெய் லவகுச படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாகவும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.