‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவிடம் கே.எஸ்.ரவிக்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் உடனடியாக படத்தின் வேலைகளை துவங்கச்சொல்லி விட்டாராம் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரை உலகிற்கு ஏற்ற பக்கா கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களுக்கான தேடலில் கே.எஸ்.ரவிக்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. நடிகை தமன்னா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வாலிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னதாகவே ப்ரீபுரொடக்ஷன் வேலைகளை கே.எஸ்.ரவிக்குமார் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.