விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
தெலுங்கில் தயாராகி உள்ள படம் சரணம் கச்சாமி. நவீன் சஞ்சய், தனிக்ஷ் திவாரி நடித்துள்ளனர். பொம்மகு முரளி தயாரித்துள்ளார். பிரேம் ராஜ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த மாதம் தணிக்கை சான்றுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் தராமல் இழுத்தடித்துள்ளனர். படம் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி சான்றிதழ் தர தணிக்கை குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 6 பேர் ஐதராபாத்தில் உள்ள தணிக்கை குழு அலுவலத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு திரும்பினார். இது குறித்து தணிக்கை அலுவலக மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.