'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய தலைமுறை ரசிகர்களை பொறுத்தவரை நடிகை சாரதா என்பவரை ஒரு குணச்சித்திர நடிகையாக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் அறுபது எழுபதுகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் தான் சாரதா. ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசிய விருது என்றழைக்கப்படுகிறது. அதனாலேயே இவரை 'ஊர்வசி' சாரதா என்றே அனைவரும் அழைப்பது வழக்கம். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது பூர்விகம் தெலுங்கு என்றாலும் மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்த படங்கள் இவரை புகழ் வெளிச்சத்தில் உயர்த்தி பிடித்தன.
நாளடைவில் குணச்சித்திர நடிகையாக மாறிய சாரதா தமிழ், தெலுங்கு என தனது வட்டத்தை சுருக்கிக்கொண்டார். மலையாள சினிமாவை பொறுத்தவரை சீனியர்களான பிரேம் நசீர், மது, சத்யன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ள சாரதாவிற்கு இன்னும் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காதது ஒரு மனக்குறையாகவே இருந்து வருகிறதாம். சமீபத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் ஆசையை தனது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சாரதா.. இதற்கு முன் 2015ல் 'அம்மக்கொரு தாராட்டு' என்கிற மலையாள படத்தில் சராதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.