பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தை இயக்கிய இயக்குனர் விவி விநாயக் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தை தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற தலைப்பில் இயக்குனர் விவி விநாயக் இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தைத் தொடர்ந்து, மெகா குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஹீரோவான சாய் தரண் தேஜ்ஜை தனது அடுத்த படத்தின் நாயகனாக விவி விநாயக் தேர்வு செய்துள்ளார்.
விவி வி நாயக் கூறிய கதை பிடித்துப்போனதால் இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. இயக்குனர் கிருஷ்ண வம்சியின் நக்ஷத்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சாய் தரண் தேஜ் வின்னர் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். வின்னர் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சாய் தரண் தேஜ், இயக்குனர் விவி விநாயக் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.