கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கான உதயமானது. தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் இருக்கிறது. ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய சூழ்நிலை. ஆந்திராவின் புராதன நகரான பிரபவாதி சாயலில், பழைமையும், புதுமையும் கொண்ட நகரமாக புதிய தலைநகரை உருவாக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுடன் சந்திரபாபு நாயுடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
புதுமையான விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பழமையான விஷயங்களை நீங்கள் முடிவு செய்து சொல்லுங்கள் அதை நாங்கள் செய்து தருகிறோம் என்று அந்த நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து ஆந்திராவின் புதிய தலைநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த குழுவில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தமிழில் வானம் படத்தை இயக்கியவரும் சமீபத்தில் வெளியான கவுதமிபுத்ரா சதாகர்ணியை இயக்கியவருமான கிரிஷ். படத்தின் கலை இயக்குனர் ஆனந்த்சாய் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒரு தலைநகர் உருவாக்கத்தில் திரைக் கலைஞர்களை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.