இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கான உதயமானது. தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் இருக்கிறது. ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய சூழ்நிலை. ஆந்திராவின் புராதன நகரான பிரபவாதி சாயலில், பழைமையும், புதுமையும் கொண்ட நகரமாக புதிய தலைநகரை உருவாக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுடன் சந்திரபாபு நாயுடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
புதுமையான விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பழமையான விஷயங்களை நீங்கள் முடிவு செய்து சொல்லுங்கள் அதை நாங்கள் செய்து தருகிறோம் என்று அந்த நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து ஆந்திராவின் புதிய தலைநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த குழுவில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தமிழில் வானம் படத்தை இயக்கியவரும் சமீபத்தில் வெளியான கவுதமிபுத்ரா சதாகர்ணியை இயக்கியவருமான கிரிஷ். படத்தின் கலை இயக்குனர் ஆனந்த்சாய் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒரு தலைநகர் உருவாக்கத்தில் திரைக் கலைஞர்களை பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.