அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
கேரளாவில் தற்போது ஒரு படம் திரையிடப்பட்டால் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் 60 சதவிகிதமும், தியேட்டர் அதிபர்கள் 40 சதவிகிதமும் பிரித்துக் கொள்வார்கள். தற்போது தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு 50 சதவிகிதம் தரவேண்டும் என்று கேட்டனர். இதற்கு கேரள திரைப்பட திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் அறிவித்தனர். புதுப்படங்களை திரையிடாமல் இருந்து வந்தனர். இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு வர வேண்டிய பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் முடங்கியது. மலையாள திரையுலகமே ஸ்தம்பித்தது. இரு தரப்புக்கும் பலசுற்று பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் "கேரள அரசு இந்த பிரச்சினையை கையிலெடுத்து சரியான நிலைப்பாட்டை எடுக்கும். தியேட்டர் அதிபர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.