மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கேரளாவில் தற்போது ஒரு படம் திரையிடப்பட்டால் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் 60 சதவிகிதமும், தியேட்டர் அதிபர்கள் 40 சதவிகிதமும் பிரித்துக் கொள்வார்கள். தற்போது தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு 50 சதவிகிதம் தரவேண்டும் என்று கேட்டனர். இதற்கு கேரள திரைப்பட திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் அறிவித்தனர். புதுப்படங்களை திரையிடாமல் இருந்து வந்தனர். இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு வர வேண்டிய பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் முடங்கியது. மலையாள திரையுலகமே ஸ்தம்பித்தது. இரு தரப்புக்கும் பலசுற்று பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் "கேரள அரசு இந்த பிரச்சினையை கையிலெடுத்து சரியான நிலைப்பாட்டை எடுக்கும். தியேட்டர் அதிபர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.