'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவே நிதானம் காட்டுகிறார் பஹத் பாசில்.. அதனால் தான் வருடத்திற்கு ஆறு படங்களை ரிலீஸ் செய்துவந்த பஹத் பாசில் இந்த வருடம் இதுநாள் வரை ஒரே ஒரு படத்தை மட்டுமே கொடுத்துள்ளார். தற்போது அவர் விஸ்வரூபம் படத்தின் எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.. இதுநாள்வரை பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்தப்படத்திற்கு தற்போது 'டேக் ஆஃப்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது..
போர்க்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த மலையாள நர்ஸ்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் நெருக்கடி நிலையையும் பிரதானப்படுத்தி இவரது படம் தயாராகிறதாம். இந்தப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். நர்ஸ் வேடத்தில் பார்வதி நடிக்கிறார் இவர்களுக்கு இணையான வேடத்தில் தான் பஹத் பாசிலும் நடிக்கிறார் குஞ்சாக்கோ போபனும் பஹத் பாசிலும் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை. பாலிவுட் நடிகரான பிரகாஷ் பெலவாடியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் உள்ள மிகச்சிறந்த நடிகர்கள் சிலரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்களாம்.