கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ஐஎஸ்எம் எனும் சமூக அக்கறை கொண்ட படத்தில் நாயகனாக நடித்த கல்யாண் ராம், அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். நாக சௌரியா நாயகனாக நடிக்க, “அப்பேயிதோ அம்மாயி” எனும் படத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவிற்கு அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இருப்பினும் ரமேஷ் கூறிய குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து திரைக்கதை கல்யாண் ராமை வெகுவாக கவர்ந்து விட்டதால் ரமேஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரவி தேஜாவின் பெங்கால் டைகர் படத்தை தயாரித்த ராதா மோகன் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சின்னி ராமைய்யா என பெயரிட்டுள்ளனர். குறைந்த பட்ஜெடில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.