சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் இருந்தவருக்கு 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் வாய்ப்பு வந்து கடைசியில் ஏனோ தட்டிப்போனது..
இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் தேடி வந்திருக்கிறது. படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டும் இருக்கிறார் ராகினி. படத்தின் பெயர் 'ஹதியா'.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 'பெருச்சாளி' மலையாளப்படம் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் நடந்தது.. அதனால் கேரளாவின் அழகை தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தவருக்கு இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கேரளாவில் நடைபெறுவதால் அந்த மனக்குறை நீங்கியுள்ளது.. கேரளா இவ்வளவு அழகா என வியந்து போயிருக்கிறார் ராகினி.