ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள நடிகரும் கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவருமான சீனிவாசன், சமீபத்தில் உடல் உறுப்பு தானத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியிருக்கிறார்.. அவருடைய கருத்துப்படி ஆர்கன் டொனேஷன் என்பது புதுமையான ஒரு ஏமாற்று வேலை என்பதான். தனது கருத்து குறித்து ஒரு கட்டத்தில் அவர் வருத்தம் தெரிவித்தாலும் கூட பல பிரபலங்கள் அவர் சொன்ன கருத்திற்கு அவ்வப்போது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் இப்போது கூட பதிவு செய்து வருகிறார்கள்.
குறிப்பாக சீனிவாசன் சொன்னது தேசிய விருதுபெற்ற மலையாள குணச்சித்திர நடிகரான சலீம் குமாரை ரொம்பவே பாதித்துவிட்டது.. அதற்கு காரணம் இன்னொருவர் தனக்கு கொடுத்த ஆர்கன் டொனேஷனில் தான், தற்போது தான் உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் சலீம் குமார்... சீனிவாசன் போன்றவர்கள் இதுபோன்று ஆராயாமல் கருத்து சொல்லியிருப்பது தன் மனதை பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை எடுத்துவரும் சலீம் குமார் தன்னை பாதித்துள்ள நோய் என்னவென்று இதுவரை வெளிப்படையாக சொன்னதில்லை. ஆனால் இப்போது ஓரளவு குணமாகிவிட்ட சலீம்குமார், சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படம் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.