ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரதாப் போத்தன் நல்ல நடிகர். ஒரு காலத்தில் நல்ல இயக்குனரும் கூட. ஆனால் அவரது வாய் துடுக்குதான் அவருக்கு பலவகையிலும் தேவையில்லாத சிக்கலை இழுத்துக்கொண்டு வந்து விடுகிறது. கடந்த வருடம் முழுவதும் ஜெயராமுடன் சண்டையிட்டுக்கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். காரணம் அவரது மகன் காளிதாசை தான் அறிமுகப்படுத்துவதற்கு முதலில் சம்மதம் சொன்ன ஜெயராம், அதன்பின் அதை கண்டுகொள்ளாமல் விட்டது தான். அந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார்.
அந்தப்படத்தின் கதையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனரான அஞ்சலி மேனன் எழுதுவார் என்றும் அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப்படம் ட்ராப் ஆனது. பிரதாப் போத்தனோ, அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை ரொம்பவே சுமாராக இருந்தது என குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு அஞ்சலி மேனன் அப்போது பெரிய பதிலடி ஒன்றும் தரவில்லை. ஆனால் இப்போது அதே படத்தை அஞ்சலி மேனன் தானே துல்கர் சல்மானை வைத்து இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே தனக்கு 'உஸ்தாத் ஹோட்டல்' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் வெற்றிகளை தந்தவர் அஞ்சலி மேனன் என்பதால் இதற்கு துல்கர் சல்மானும் ஓக்கே சொல்லிவிட்டாராம்.. இதை கேள்விப்பட்ட பிரதாப் போத்தன் 'அடடா வட போச்சே' என வடிவேலு பாணியில் அப்செட் ஆகியுள்ளாராம்.