தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
நடிகர் ஜெயராம் தற்போது சி.பி.எல் எனப்படும் செலிபிரட்டி பேட்மிண்ட்டன் லீக் போட்டிகளில் பிஸியாக இருக்கிறார். பின்னே..? கேரளா ராயல்ஸ்' சி.பி.எல் டீமின் கேப்டன் அவர்தானே.. இந்த அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடைபெற்றது.. இந்த விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் மாதவன், குஞ்சாக்கோ போபன், நரேன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.. இந்த விழாவுக்கு மம்முட்டியை ஜெயராம் வரவழைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை..
சமீபத்தில் நடைபெற்ற மம்முட்டியின் 'தோப்பில் ஜோப்பன்' இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஜெயராம். அந்த விழாவில் பேசும்போது தனது மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் படிக்க சீட் வாங்கிய அனுபவத்தை உருக்கமாக சொன்னார். அதில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, மேடையில் அனைவரின் முன்னிலையிலும் அதன் தாளாளரிடம் தனது மகனுக்கு சீட் தரவேண்டும் என கேட்டு அவரிடம் சத்தியம் வாங்கிய கதையை கூறினார்..
'தோப்பில் ஜோப்பன்'இசைவெளியீட்டு விழாவுக்கும், ஜெயராம் தனது மகனுக்கு சீட் வாங்கியதற்கும் என்ன சம்பந்தம் என மம்முட்டி உட்பட வந்திருந்த ஆடியன்ஸ் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள்.. ஆனால் ஜெயராம் எவ்வளவு புத்திசாலி என்பது அதன்பின்னர்தானே தெரிந்தது.. அதாவது அப்படி மேடையில் அனைவர் முன்னிலையிலும் சத்தியமோ, வாக்கோ கொடுக்கப்பட்டு விட்டால் அதை மீற முடியாதலவ்வா, அதேபோல இந்த விழா மேடையிலும் டக்கென மம்முட்டியின் கைகளை பிடித்துக்கொண்ட ஜெயராம், நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தனது கேரளா ராயல்ஸ் அணியின் அறிமுக விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என ஒரு கோரிக்கையை வைத்தும் விட்டார்.
தர்மசங்கடம் தான் என்றாலும், பொதுமேடை என்பதாலும், தனது விழாவுக்கு ஜெயராம் வந்திருந்ததாலும் மறுப்பாக பதில் சொல்லமுடியாத மம்முட்டி, ஜெயராமின் ட்ரிக்கை பாராட்டியபடி, தான் அவரது விழாவுக்கு வருவதாக வாக்களித்தார. சொன்னபடி இரண்டு நாள் கழித்து நடைபெற்ற அந்த விழாவிலும் கலந்துகொண்டு ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் மம்முட்டி.