தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதன் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராணா, அஜித்துடன் ஆரம்பம், ஆர்யா, பாபி சிம்ஹாவுடன் பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராஜமௌலியின் பாகுபலி படத்தில் பலதேவ் எனும் வில்லன் வேடத்தில் மிரட்டிய ராணா அப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ராணா செய்தியாளர்களை எதிர்கொள்ளும் போது தவறாமல் எதிர்கொள்ளும் கேள்வி, திருமணம் எப்போது என்று தான். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணாவிடமும் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராணா, குடும்பதினார் தனது திருமணத்தில் அதிக அவசரம் காட்டுவதாகவும் ஆனால் தான் நிதானமாகவே திருமண பந்தத்தில் இணைய விரும்புவதாகவும் கூறியுள்ளார். கைவசம் பல படங்கள் இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு பிறகே திருமணம் குறித்து யோசிக்க முடியும் என்றும் ராணா கூறியுள்ளார்.