மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் |
நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை அமைத்திருக்கிறார். மூன்று திரையரங்குகளை கொண்ட இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் கடந்த 2014 கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து படங்களை திரையிட்டு வருகிறது.
நேற்று முன் தினம் இந்த தியேட்டரில் இருந்து சுமார் 6.82 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களில் திரையிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் தான் அது. ஆனால் திருடியது யாராக இருக்கும் என்கிற விபரமும் கிடைத்துவிட்டது.. இந்தப்பணம் திருடுபோன பின்னர், அவங்கே பணியில் இருந்த பெங்காலி ஊழியர் ஒருவர் பணிக்கு வராததையும், சாலக்குடியில் உள்ள அவரது இருப்பிடத்திலும் இல்லாததையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவரை பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் கேரள போலீஸார்.