தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிவின் பாலியுடன் நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அந்த படம்தான் அவருக்கு கோலிவுட் கதவுகளை திறந்து விட்டது. அதன்காரணமாக கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார் மஞ்சிமாமோகன். தமிழில் சிம்பு, தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படி ஒரே படம் மூலம் இரண்டு பிரபல ஹீரோக்களுடன் நடித்து விட்டதால் பேசப்படும் நடிகையாகி விட்டார் மஞ்சிமா மோகன்.
அதையடுத்து, தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வரும் மஞ்சிமா அடுத்தபடியாக தமிழில் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கிலும் ஒரு படம் அவருக்கு கிடைத்துள்ளதாம். அந்த படம் மஞ்சிமாவுக்கு கிடைக்க நாகசைதன்யாதான் காரணமாம். அவர்தான் தனது நட்பு வட்டார டைரக்டர் ஒருவர் தனது படத்திற்கு நாயகி தேடியபோது, தன்னுடன் நடித்த மஞ்சிமாமோகனைப் பற்றி சொல்லி அந்த இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். ஆக, தெலுங்கில் நடித் துள்ள முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்த படத்திலும் கமிட்டாகி விட்டார் மஞ்சிமா மோகன்.