திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மலையாள நடிகர் தான் என்றாலும் தமிழ்சினிமா தனக்கு அளித்த கௌரவத்தை மனதில் கொண்டு தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகப்படுத்தும் ஆசையில் இருந்த ஜெயராம் பாலாஜி தரணீதரனின் டைரக்சனில் 'ஒரு பக்க கதை'யில் மகனை நடிக்க வைத்தார். சில காரணங்களால் அந்தப்படம் வெளியாகாமல் இருக்க, அடுத்ததாக பிரபுவுடன் சேர்த்து 'மீன் குழம்பும் மண்பானையும்' என்கிற படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படமும் ஆடியோ ரிலீஸ் முடிந்த நிலையில் ரிலீஸாக தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், சரி.. மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுக வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஜெயராம், மலையாளத்தில் காளிதாஸ் நடிக்கும் முதல்படமே குறிதப்பாமல் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது இயக்குனர் அப்ரிட் ஷைனைத்தான்.. யார் இந்த அப்ரிட் ஷைன் என்கிறீர்களா..? நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டுமுறை 100 நாள் படங்களை கொடுத்தவர்.. தனது ஹாட்ரிக் சாதனைக்காக துடிப்புடன் தயாராகி வரும் அப்ரிட் ஷைன் படத்தில் காளிதாஸ் அறிமுகமாவது வெற்றிக்கான நூறு சதவீத உத்தரவாதம் என நம்புகிறாராம் ஜெயராம்.