ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக கொண்டு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகி விடுகின்றன. அறிமுக இயக்குனர்களும், இரண்டாம் நிலை இயக்குனர்களும் மட்டுமே கவனம் செலுத்திவந்த இந்த கான்செப்ட்டில் முன்னணி நடிகர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் மம்முட்டியை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள புதிய படம் கேரள நகரம் ஒன்றில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தானாம்.
இந்தப்படத்தில் மம்முட்டி சராசரி நகரத்து மனிதனாக நடிக்கிறாராம். அப்படி ஒரே நாளில் நிகழும் பிரச்சனைகள் மம்முட்டியை எப்படி திசைமாற்ற முயற்சிக்கின்றன என்பதும் அதிலிருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார் என்பதும் தான் கதையாம். இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே ஜீத்துவிடம் உடனே படப்பிடிப்பிற்கு நாள் குறிக்க சொல்லிவிட்டாராம் மம்முட்டி.. ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தை பிருத்விராஜுக்கும், 'த்ரிஷ்யம்' படத்தை மோகன்லாலுக்கும் விட்டுக்கொடுத்து இரண்டு ஹிட்டுகளை கைநழுவ விட்ட மம்முட்டி, இந்த முறை சுதாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.