ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் க்ரிஷ் இயக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நடித்து பாலகிருஷ்ணா தனது மகனை டோலிவுட்டில் நாயகனாக களமிறக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். கௌதமிபுத்ர சாதர்கனி திரைப்படம் தனது 100வது திரைப்படம் என்பதால் பாலகிருஷ்ணா இப்படம் கட்டாய வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அவசரப்படாமல் நிதானமாக உழைத்து வருகின்றார். இயக்குனர் க்ரிஷின் திருமணம் ஆகஸ்ட் 8ல் நடக்கவிருப்பதால் இயக்குனர் மற்றும் படக்குழுவிற்கு விடுமுறை அளித்துவிட்டார் பாலகிருஷ்ணா.
ஓய்வு நேரங்களில் தனது மகன் மோக்ஷக்னாவை நாயகனாக அறிமுகப்படுத்த முன்னணி இயக்குனர்களிடம் பாலகிருஷ்ணா கதை கேட்டு வருகின்றாராம். இயக்குனர் கொரட்டாலா சிவா மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பாலகிருஷ்ணாவிடம் கதை கூறியுள்ளனராம். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம். கௌதமிபுத்ர சாதர்கனி படத்தில் மோக்ஷக்னா உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார் .விரைவில் மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.