ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடிப்பில் விவசாயத்திற்காக போராடும் கதைக்களத்தில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக டோலிவுட்டில் தயாராகி வருகின்றது. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்த கத்தி படத்தை தெலுங்கில் கத்திலான்டோடு என்ற பெயரில் இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் இறங்கியுள்ளது. இருப்பினும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் வில்லனை தற்போதுதான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார். கணிதன் படத்தில் வில்லனாக நடித்த தருண் அரோரா இப்படத்தில் சிரஞ்சீவியுடன் மோத உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ், அல்லது பாலிவுட் பிரலம் விவேக் ஓப்ராய் போன்றோர் சிரஞ்சீயின் 150வது படத்தில் வில்லனாக நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு தருண் அரோராவிற்கு கிடைத்துள்ளது. சிரஞ்சீவியுடன் சுடலனி உண்டி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அஞ்சலா ஜவேரியின் கணவர்தான் தருண் அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.