600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் தமிழ் ரசிகர்களுக்கு நேரடி பழக்கம் இல்லாவிட்டாலும் விபரம் சொன்னால் அட அவரா இவர் என்பார்கள்.. ஆம் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானதோடு, தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரேமம்' ஆகிய படங்களின் தயாரிப்பளார் இவர் தான். அட.. தயாரிப்பாளராக்கும் என சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.. அடிப்படையில் இவர் மிகச்சிறந்த இயக்குனர். ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது.
11 வருடங்களுக்கு முன்னரே 23 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்தது. மம்முட்டிக்கு காமெடி வராது, ஒர்க் அவுட் ஆகாது என அதுவரை இருந்த மாயையை அடித்து தகர்த்தது. அப்படிப்பட்ட அமர்க்களமான அறிமுகத்தை மெகாஸ்டார் மம்முட்டி மூலம் பெற்று, அவருக்கும் வெற்றியை பரிசாக தந்த அன்வர் ரஷீத், மேலும் மம்முட்டிக்கு கைமாறு செய்யும் விதமாக அவரது மகன் துல்கர் சல்மானின் இரண்டாவது படத்தை தானே இயக்கினார்.. அதுதான் துல்கரின் திரையுலக வாழ்க்கையை வெற்றிப்பாதையில் திருப்பிய உஸ்தாத் ஹோட்டல்.இவ்வளவு அருமை பெருமைகளை உடைய அன்வர் ரஷீத் கூட்டணி 2008ல் 'அண்ணன் தம்பி' என மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தாலும் அதன்பின் மீண்டும் கை கோர்க்கவில்லை.. இப்போது கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இணைகிறார்கள் என்பது மம்முட்டி ரசிகர்களுக்கு உற்சவம் போலத்தான். பஹத் பாசில் மார்க்கெட் சரிந்து கிடந்ததால் அவரை கைதூக்கிவிடும் விதமாக, 'மணியறையில் ஜின்னு' என்கிற படத்தை இயக்க அன்வர் திட்டமிட்டிருந்தார். இப்போது பஹத் பாசிலுக்கு 'மகேஷிண்டே பிரதிகாரம்' மூலம்' மார்க்கெட் ஸ்டெடியானதால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்முட்டி படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பது போனஸ் தகவல்.