ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளத்து பெண்கள் சிலருக்கு மட்டும் நடிகையாகி பெரும் புகழும் கிடைக்கும் வரமும், அதேசமயம் பிரபல நடிகையானபின் குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவும் சாபமும் என இரண்டையும் ஒருசேரத்தான் இறைவன் படைத்துள்ளானோ என என்னும் விதமாகத்தான் நிகழ்வுகள் நடக்கின்றன. சரிதாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி, மஞ்சு வாரியர், மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன் என முன்னணி நடிகைகளாக கோலோச்சிய மலையாள நடிகைகள் பலரும் தங்களது கணவருடன் பிணக்கு ஏற்பட்டு மணவாழ்க்கையில் இருந்து பிரிந்தே இருக்கின்றனர்.. அவர்கள் செய்தது காதல் திருமணமோ, அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் ரிசல்ட் இதுதான்..
அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலாபாலுக்கும் அவரது கணவருக்கும் கூட கருத்து வேறுபாடு என்றும், விவாகரத்துக்கு முடிவு செய்துள்ளார்கள் என்றும் கூட செய்திகள பலவாறாக வெளியாகி வருகின்றதை பார்க்கும்போது மீண்டும் இன்னொன்றா என்கிற சங்கடம் தான் ஏற்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இணைந்த நடிகை மீரா ஜாஸ்மினோ தானும் தன கணவரும் மற்றவர்கள் நினைப்பது போல சாதாரண தம்பதி அல்ல என்றும், தான் படங்களில் மீண்டும் நடிக்க வந்ததே தனது கணவர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்கிறார். இருவருக்குமான அடிப்படை உணர்வுகளை ஒருவருக்கொருவர் மதிக்கும்போது அங்கே பிரிவுக்கு வழியேது என்கிறார் மீரா ஜாஸ்மின்.