ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தங்கள் திரை உலக பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி தனது 150வது திரைப்படமான கத்திலான்டோடு திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படத்தை வரலாற்று பின்னணியிலும் உருவாக்கி வருகின்றார்.
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் அவரது 100வது படத்திற்கு பிரபல வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றார். அதே போல் இயக்குனர் விவி விநாயக் இயக்கும் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கும் சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றாராம். ஒரே நேரத்தில் சரித்திர படத்திற்கும், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படத்திற்கு சாய் மாதவ் வசனம் எழுதுகின்றார்.
முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் பணியாற்றும் பெருமை சாய் மாதவ் போல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் கிடைத்துள்ளது. சிரஞ்சீவியின் கத்திலான்டோடு, மற்றும் பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சாதர்கனி என இருபடங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இவ்விரு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.