அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளே தயாராக இருந்தபோதும், பெரிதாக ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத முகம் வேண்டும் என்று தீபா ராமானுஜத்தை விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடிக்க வைத்தார் சசி. அதையடுத்து ரஜினிமுருகன் படத்திலும் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்தார் தீபா. ஆனபோதும் பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி அவருக்கு படங்கள் இல்லை.
ஆனால், பிச்சைக்காரன் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகியிருப்பதை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் தீபா ராமானுஜத்துக்கு மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிச்சைக்காரன் படத்தைப்போலவே வெயிட்டான அம்மாவாக நடிக்கிறாராம் தீபா. பிச்சைக்காரன் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு, அப்படத்தில் நடித்தவர்களின் தெலுங்கு மார்க்கெட் உயர்ந்தபோதும் இன்னும் புதிய தெலுங்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த வகையில், தீபா ராமானுஜத்துக்குத்தான் முதல்வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மகேஷ்பாபுவின் அம்மாவாக தமிழ்,தெலுங்கு, இந்தி என ஒரே படத்தில் மூன்று மொழிகளில் நடிக்கிறார் தீபா.