மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளைக்(ஆகஸ்ட் 22) வெகு விமர்சையாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடுகளை தற்போதிலிருந்தே கவனிக்க துவங்கி விட்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தற்போது நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தந்தையின் பிறந்த நாளன்று தனது புதிய படம் ஒன்றை துவக்க ராம் சரண் திட்டமிட்டிருந்தார். ஆனால் இயக்குனர் சுகுமார் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடிக்காததால் அப்படத்தை செப்டம்பரில் துவங்க ராம் சரணிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் தற்போது நடித்து வரும் துருவா படத்தின் பாடல் ஒன்றை ஆகஸ்ட் 22ல் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் ராம் சரண். தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார்.