'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி எப்போதுமே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் தீவிர ரசிகர்.. சொல்லப்போனால் இந்திய சினிமாவில் இயல்பான நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் என மோகன்லாலைத்தான் அவர் கருதுகிறார். மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சி ஏற்கனவே ஒரு முறை கைவிட்டுப்போனதால் இன்னும் கூட வருத்தத்தில் தான் இருக்கிறார் ராஜமவுலி. அந்தவகையில் தற்போது 'மனமந்தா' படம் மூலம் மோகன்லாலை தெலுங்கு திரையுலகத்திற்கு அழைத்து வந்ததற்காக அந்தப்படத்தின் இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ராஜமவுலி.
தற்போது ஒரே சமயத்தில் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருவது தெரிந்த விஷயம் தான்.. அதில் சந்திரசேகர் ஏலெட்டி இயக்கத்தில் 'மனமந்தா' படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் மோகன்லால்.. மற்றொன்று ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துவரும் 'ஜனதா கேரேஜ்'. இதில் மனமந்தா படம் மலையாளத்தில் 'விஸ்மாயா' என்றும் தமிழில் 'நமது' என்கிற பெயரிலும் வெளியாகிறது. இந்தப்படத்தில் மோகன்லாலின் ஜோடியாக கௌதமி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவதற்காக தயாராகி வருகின்றன.