பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருட்டு விசிடி மற்றும் திருட்டு இணையதளங்களால் புதிய படங்கள் வெளியாவதுதான், இந்தியத் திரையுலகம் தற்போது எதிர்நோக்கியுள்ள மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அனைத்து மொழிப் படங்களும் படம் வெளியான அன்றே திருட்டு விசிடியாகவும், பைரசி இணையதளங்கள் மூலமாகவும் வெளிவந்து விடுகின்றன. அவற்றைத் தடுப்பதற்காக திரையுலகத்தினர் எவ்வளவு போராடியும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசாங்கங்களும், மத்திய அரசும் மனது வைத்தால் அதை உடனடியாகத் தீர்த்து வைக்க முடியும்.
கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் எதையும் சாதிக்கலாம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், மாநில அரசுகளோ, மத்திய அரசுகளோ இதில் அதிக ஈடுபாட்டு காட்டாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. இந்திய அளவில் திரையுலகத்தினர் ஒன்று சேர்ந்து போராடினால் இதற்கு நல்லதொரு வழி பிறக்கும்.
இருந்தாலும் தெலுங்குத் திரையுலகினர் நலனுக்காக தெலுங்கானா அரசு இதற்காக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக அறிவுசார் சொத்து குற்றப் பிரிவு என்ற ஒரு பிரிவை தெலுங்கானா அரசு உருவாக்கியுள்ளது. அவர்கள் தெலுங்கானா மாநில சைபர் கிரைம் குழுவினருடன் இணைந்து பணியாற்றி திருட்டு விசிடி, பைரசி இணையதளங்கள் மூலம் திரைப்படங்கள் வெளியாவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
தெலுங்கானாவில் ஐ.டி. துரை மந்திரி கேடிஆர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு தெலுங்குத் திரையுலகினர் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அது போன்ற ஒரு பிரிவை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி திரையுலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென தமிழ்த் திரையுலக சங்கங்கள் அனைத்தும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தால் தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லது நடக்கும்...சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா ?.