டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தான் ஒரு ஏர் கோஸ்டஸாக விரும்பியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாக மாறி தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ரோஜா பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணன் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.