திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறியது.. கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முகேஷ்.
ஆனால் கொல்லம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று, எங்களது எம்.எல்.ஏ முகேஷை அவர் வெற்றிபெற்ற பின்னர் எங்கள் தொகுதிப்பக்கமே பார்க்கமுடியவில்லை.. கடைசியாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது பார்த்ததுதான். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என மேன் மிஸ்ஸிங் புகார் கொடுத்துள்ளார்களாம். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.. அதற்குள்ளாகவே எதிராளிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் முகேஷ்.