தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரம்மோற்சவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்து விட்டு ப்ரீ புரொடக்ஷன் பணிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். மனைவி நம்ரதா மற்றும் குழந்தைகள் கௌதம், சித்தாராவுடன் அமெரிக்கா சென்றுள்ள மகேஷ் பாபு ஜுன் 20ல் ஐதராபாத் திரும்பவுள்ளாராம். இதனால் ஜூலை முதல் வாரத்தில் மகேஷ் பாபு - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், ப்ரணிதி சோப்ரா போன்ற நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை.