ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள தியேட்டர்களில் தமிழ் நடிகர்களின் படங்கள் எளிதாக ஊடுருவிச்சென்று கோலோச்சுகின்றன. அவ்வளவு ஏன்..? அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் முன்னணி மலையாள நடிகர்களே தங்களது படங்களின் ரிலீஸை தள்ளி வைத்து விடுகிறார்கள்... நிலைமை இப்படி இருக்க, இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்கிற ரீதியில் தான் மலையாள படங்கள் ஆந்திராவில் வெளியாகாமல் இருப்பதும், தெலுங்குப்படங்கள் கேரளா பக்கம் எட்டிப்பார்க்காமலும் இருக்கின்றன.
இந்த நிலையை முதலில் உடைத்தவர் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தான்.. இவருக்கு மட்டும் எப்படி கேரளாவில் இவ்வளவு வரவேற்பு கிடைத்தது என சக நடிகர்களே ஆச்சர்யப்படும் வகையில் அல்லு அர்ஜுனின் படங்கள் தொடர்ந்து மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு கேரளாவில் வெளியாகி வசூலையும் அள்ளுகின்றன. அந்தவகையில் தெலுங்கில் சமீபத்தில் வெற்றிபெற்ற அல்லு அர்ஜுனின் படமான 'சரோனைடு' படமும் 'யோதாவு' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று ரிலீசாகியுள்ளது. போயப்பட்டி சீனி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் கேத்தரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்க, தமன் இசையமைத்துள்ளார். முதல்நாளே ரசிகர்கள் இந்தப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பையும் வசூலையும் கொடுத்துள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.