மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய அளவிலான கார்ட்டூன் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கார்ட்டூன் அகாடமி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் சில தினங்களுக்கு முன் அதாவது தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் மோகன்லால். அங்கே இருந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்ட மோகன்லால், ஸ்மைலிஸ் குறியீடுகள் வரையப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அப்போது கார்டூனிஸ்ட்டுகளை வாழ்த்தி பேசிய மோகன்லால், “ஓராயிரம் வார்த்தைகள் சேர்ந்து சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கார்ட்டூன் சொல்லிவிடும்.. அவ்வளவு ஏன் ஒரு செய்தித்தாள் வாசித்த உணர்வை ஒரு கார்ட்டூனே தந்துவிடும். நம் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.சங்கர் என்பவரின் கார்ட்டூன்களில் தனது படம் இடம்பிடிப்பதை பெருமையாக நினைத்தார்” என கார்ட்டூனிஸ்ட்டுகளை பாராட்டியதோடு கார்ட்டூனிஸ்ட்டுகளால் தான் அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.